Kathir News
Begin typing your search above and press return to search.

சிவலிங்கம் அருகே காலில் செருப்புடன் நடந்த த்ரிஷா - காவல்நிலையத்தில் புகார் !

சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது

சிவலிங்கம் அருகே காலில் செருப்புடன் நடந்த த்ரிஷா - காவல்நிலையத்தில் புகார் !

Mohan RajBy : Mohan Raj

  |  4 Sep 2021 9:15 AM GMT

சிவன் கோவிலில் காலில் செருப்புடன் நடிகை த்ரிஷா நடந்ததற்கு ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்னம் மீது இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.





இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி'யின் 'பொன்னியின் செல்வன் நாவல்' படமாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன அங்கு நடிகை த்ரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகை த்ரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.





இது தொடர்பாக இந்துக்களை புனித கோவிலை அவமதித்துவிட்டதாக இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன.


Source - Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News