Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதி தொகுதியில் 'பிரியாணி' அண்டாவை தூக்கி ஓட்டம் பிடித்த தி.மு.க-வினர்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளது. ஆனால் திமுகவோ எந்த கடையில் சாப்பிடுவது, எப்படி அவர்களிடம் பணம் தராமல் ஏமாற்றுவது என்பதே குறிக்கோளாகவும் வைத்துள்ளனர்.

உதயநிதி தொகுதியில் பிரியாணி அண்டாவை தூக்கி ஓட்டம் பிடித்த தி.மு.க-வினர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 April 2021 5:56 AM GMT

சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் பிரியாணி அண்டாவை அலேக்காக தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த தி.மு.க உ.பி-க்களால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஓசி பிரியாணி என்றாலே அது தி.மு.க-தான் என்று அனைவரும் இணையதளங்களில் வீடியோக்களை பார்த்திருப்போம். அவர்களுக்கு என்று ஒரு வரலாறும் உண்டு. ஓட்டலுக்கு சென்றால் சாப்பிடுவது, பின்னர் பணம் கொடுக்காமல் பாக்ஸிங் செய்வது மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதே போன்ற சம்பவம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளது. ஆனால் தி.மு.க-வோ எந்த கடையில் சாப்பிடுவது, எப்படி அவர்களிடம் பணம் தராமல் ஏமாற்றுவது என்பதே குறிக்கோளாகவும் வைத்துள்ளனர்.

அந்த வகையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர்கள் திருவல்லிக்கேணி கந்தப்ப தெருவில் தேர்தல் அலுவலகம் திறப்பதற்காக அங்கு ஒரு பழைய கட்டடத்தை பார்த்துள்ளனர், மளிகை கடை இருந்த கட்டடம் அது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக கடை காலி செய்யப்பட்டு இருந்தது.

இதனை அறிந்த உடன் பிறப்புக்கள், தங்களுக்கு வசதியாக போச்சு என்று நினைத்து தி.மு.க வட்ட நிர்வாகி கடை உரிமையாளரிடம் பேசியிருக்கிறார். அவர் கடை கொடுக்க முடியாது என்றுள்ளார். இதன் பின்னர் தங்களின் ஸ்டைலில் கடை உரிமையாளரை மிரட்டி பணிய வைத்துள்ளனர். அந்த அலுவலகத்தை எப்படியோ தி.மு.க வட்டம் திறந்துள்ளது. இதற்காக உதயநிதியும் பாராட்டி தள்ளியுள்ளாராம்.

இதில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் பாய்க்கு ஒரு சோதனையும் நடந்துள்ளது. தேர்தல் அலுவலகத்தில் தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அப்போது மதியம் சாப்பிடுவதற்காக பிரியாணி வேண்டும் என்று உடன் பிறப்புக்கள் கேட்டுள்ளனர். இதனையடுத்து தி.மு.க-வின் முன்னாள் பகுதி செயலரின் வாரிசு ஒருவர் பாய் கடைக்கு சென்று தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பாய் காசு கொடுத்தால் மட்டுமே பிரியாணி கொடுப்போம் என்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த உ.பி-க்கள் எங்களிடமே காசு கேட்கிறாயா, நாங்கள்தான் அடுத்த ஆட்சி தெரியுமா என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து பாயும் பிரியாணி பொட்டலங்களை பார்சல் கட்டி அதற்கான பில்லையும் கொடுத்துள்ளார். இதனால் கொந்தளித்த உ.பி-க்கள், தங்களின் ஸ்டைலில் பாயை மிரட்டியுள்ளனர். பிரியாணிக்கு பணமா கேட்கிறார் என்று சில உ.பி-க்கள் மிரட்டியுள்ளனர்.


இதன் பின்னர் பாய் கிட்ட எதற்கு பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள். பிரியாணி அண்டாவை தூக்குங்கள் என சில உ.பி-க்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மற்ற உ.பி-க்கள் பிரியாணி அண்டாவையும், கட்டி வைத்த பொட்டலங்களையும் அலேக்காக தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். பாய் கத்தி கூப்பாடு போட்டும் அவர்கள் கேட்காமல் ஓடி விட்டனராம். பாய் தனது தலையில் துண்டை போட்ட அமர்ந்ததுதான் மிச்சம் என்கிறார்கள் சேப்பாக்கம் மக்கள்.

ஆட்சிக்கு இன்னும் வரவில்லை. அதற்குள் தங்களின் வேலைகளை உ.பி-க்கள் காட்டி விட்டனர். பொது மக்கள் அனைவரும் உஷாராக இருங்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News