Begin typing your search above and press return to search.
100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நெருங்கும் மோடி தலைமையிலான அரசு - மன்சுக் மாண்டவியா பெருமிதம்

By :
அடுத்த வாரத்தில் 100 கோடி கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு இமாலய சாதனையை இந்தியா நிகழ்த்தும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 97.25 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சுக் மாண்டவியா கூறியதாவது, "தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக தொடர்வதால் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை கடக்கும் என தெரிவித்தார், 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியதும் துறைமுகங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story