Kathir News
Begin typing your search above and press return to search.

"எங்கள் வேல் யாத்திரையை கேலி செய்த ஸ்டாலின் கையில் ஒரு மாதத்தில் வேல்" - எல்.முருகன்!

"எங்கள் வேல் யாத்திரையை கேலி செய்த ஸ்டாலின் கையில் ஒரு மாதத்தில் வேல்" - எல்.முருகன்!

எங்கள் வேல் யாத்திரையை கேலி செய்த ஸ்டாலின் கையில் ஒரு மாதத்தில் வேல் - எல்.முருகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2021 9:38 AM GMT

"சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்வது உறுதி" எனவும், "வேல் யாத்திரையை கேலி செய்த ஸ்டாலினை ஒரு மாதத்தில் கிருத்திகை அன்று வேல் கையில் வந்துள்ளது" எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அடித்து கூறியுள்ளார்.

நாமக்கல்லில் பா.ஜ.க சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் நாமக்கல் சென்றார். பின்னர் அவர்
நிகழ்ச்சியில் பேசியதாவது, "மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்களது வேல் யாத்திரையை ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் குறை கூறினார்கள். கேலி, கிண்டல் செய்தார்கள். நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் சாமி கும்பிட மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்றைக்கு அதே கிருத்திகை நாளில் ஸ்டாலின் கையில் வேல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்தது வரவேற்க கூடியது. இதற்காக முதல்
அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "
"தமிழகத்தில் பா.ஜ.க'வுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க'வின் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி" என நம்பிக்கையுடன் அடித்து கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News