இப்போது அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்? மதுக்கடை திறப்பு குறித்து கனிமொழிக்கு வானதி சீனிவாசன் நெத்தியடி கேள்வி.!
மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
By : Thangavelu
மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 14ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில் இறப்பு நூற்றுக்கணக்கில்.. டாஸ்மாக் திறப்பு அவசியமா??
ஸ்டாலின் போட்ட வேஷம் மாறியதோ??
ஒலித்த கோஷம் மறந்ததோ??
இதுதான் விடியலா?? என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கனிமொழி எம்.பி.,யை குறிப்பிட்டு வானதி சீனீவாசன் ட்விட்டில் கூறியிருப்பதாவது: இப்போது ஸ்டாலின் அண்ணனிடம் என்ன, எப்படி கேட்பீர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.