Kathir News
Begin typing your search above and press return to search.

ரவுடிகளுக்கு பதிலாக வி.சி.க.வை கைது செய்வதா? போலீசுக்கு எதிராக பொங்கிய வன்னி அரசு!

சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நடும் பிரச்சனையில் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரவுடிகளுக்கு பதிலாக வி.சி.க.வை கைது செய்வதா? போலீசுக்கு எதிராக பொங்கிய வன்னி அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  26 Sep 2021 9:12 AM GMT

சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நடும் பிரச்சனையில் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் வன்னி அரசு. இவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரவுடிகள் தேடுதல் பெயரில் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தலித்விரோதப்போக்கை காவல்துறை கையாண்டு வருகிறது. விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் ஆதிதிராவிடர்களை குறிவைத்து விசாரணை எனும் பெயரில் கைது செய்வது கண்டனத்துக்குரியது. போலீசா? சாதிவெறியர்களா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: VCK VanniArasu

Image Courtesy:Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News