மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் வெளியிட வி.சி.க'வினர் கைது - கண்துடைப்பா? முன்னெச்சரிக்கையா?
பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் வழங்கியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
By : Mohan Raj
பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் வழங்கியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் பொது மக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புக்கதை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 12 பேரை காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவன் பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகத்தை வழங்கினார். இதேபோல் தென்காசியில் பொதுமக்களுக்கு மனு ஸ்மிருதி பிரச்சார புத்தகம் வழங்கிய வி.சி.க'வினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆனால் சென்னையில் புத்தகத்தை விநியோகித்த திருமாவளவன் கைது செய்யப்படாது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் 'ஏன் சென்னையில் திருமாவளவன் கைது செய்யப்படவில்லை' என கேள்வி எழுப்பி உள்ளார்.