Kathir News
Begin typing your search above and press return to search.

குடும்ப பெண்களை தகாத முறையில் பேசி வி.சி.க நிர்வாகி தகராறு - மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நபர் !

குடும்ப பெண்களை தகாத முறையில் பேசி வி.சி.க நிர்வாகி தகராறு -   மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நபர் !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Nov 2021 10:00 AM GMT

கோவையில் இடத் தகராறு காரணமாக தன்னை அடித்து உதைத்து ரவுடியிசத்தில் ஈடுபட்ட வி.சி.க நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அஞ்சல் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ், அங்குள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜுக்கும் இடப்பிரச்சனை எழுந்துள்ளது.

இடப்பிரச்சினை தொடர்பாக ஜார்ஜ் குப்புசாமி அடிக்கடி அற்புதராஜுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆபாசமாக பேசி தாக்கியுள்ளதாக அற்புதராஜ் கூறியுள்ளார்..மேலும், அற்புதராஜின் 2 மகள்கள் மற்றும் மகனை விசிக நிர்வாகி ஆபாசமாகப் பேசியதோடு, தாக்கியதாகவும், அற்புதராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அங்கு வந்த போலீசார் அற்புதராஜ் அவர்களை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பரபரப்பு நிலவுகிறது.


Source - one india tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News