Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் காலில் செருப்புடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - இந்துமத வெறுப்பின் உச்சம் !

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் காலில் செருப்புடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - இந்துமத வெறுப்பின்  உச்சம் !

Mohan RajBy : Mohan Raj

  |  4 Oct 2021 11:15 AM GMT

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு மற்றும் சில விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் செருப்பு காலுடன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடவுள் இல்லை அதிலும் இந்து மத கடவுள்கள் மட்டும் இல்லை எனவும், சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என உளறிக்கொண்டு அலையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு மற்றும் அவருடன் அவ்வபோது ஆபாசமாக பேசி வரும் சுந்தரவள்ளி ஆகியோர் செருப்பு காலுடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் செருப்புடன் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதனால் இந்து மத ஆர்வலர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News