Kathir News
Begin typing your search above and press return to search.

கதிர் செய்திகள் எதிரொலி: செய்யூரில் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்த மின்சார மின்மாற்றி! #KathirImpact

கதிர் செய்திகள் எதிரொலி: செய்யூரில் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்த மின்சார மின்மாற்றி! #KathirImpact

DhivakarBy : Dhivakar

  |  28 Oct 2021 6:32 AM GMT

கதிர் செய்தி எதிரொலியால் இரண்டு மாதமாக மக்கள் பயன்பாட்டிற்கு காத்திருந்த மின்சார மின்மாற்றி, நேற்று திறந்துவைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, வன்னியநல்லூர் கிராமத்தில், புதிய மின்சார மின்மாற்றி அமைக்கும் பணி முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும், தி.மு.க எம்.எல்.ஏ வந்து தான் திறப்பு விழா என காத்திருந்ததால் அப்பகுதி மக்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து, 24-10-2021அன்று உங்கள் கதிர் செய்திகளில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து, நேற்று(27.10.2021) வன்னியநல்லூர் கிராமத்தில் அந்த புதிய மின்சார மின்மாற்றியை கதிர் செய்திகள் எதிரொலி காரணமாக நேற்று விடுதலை சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ பாபு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.




கதிர் செய்திகளை தொடர்ந்து படித்து, மக்களுக்கான பிரச்சனைகள் எம் செய்தி தளத்தில் வெளியானால், உடனடியாக தீர்த்து வைக்கும் ஆளும் கட்சிக்கு எம் செய்திக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News