Kathir News
Begin typing your search above and press return to search.

துரைமுருகனுக்கு சீட் வழங்கக்கூடாது.. ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கும் வேலூர் தி.மு.க.வினர்.!

துரைமுருகனுக்கு சீட் வழங்கக்கூடாது.. ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கும் வேலூர் தி.மு.க.வினர்.!

துரைமுருகனுக்கு சீட் வழங்கக்கூடாது.. ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கும் வேலூர் தி.மு.க.வினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jan 2021 10:38 AM GMT

வருகின்ற சட்டசபை தேர்தலில் துரைமுருகனுக்கு சீட் வழங்கக்கூடாது என வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் அக்கட்சி தலை¬மைக்கு கடிதம் மேல் கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன் செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாகவே அவர் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அழைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு தற்போது 82 வயதாகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல வயதானவர்கள் இறக்க நேரிடுகிறது. அதே போன்று நாடு முழுவதிலும் சரி, தமிழகத்திலும் சரி முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் மூத்தவர்களுக்கு வருகின்ற சட்டசபை தேர்தலில் சீட் வழக்கக்கூடாது என வேலூர் தி.மு.க. இளைஞர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் களத்தில் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி செல்வதற்கு துரைமுருகனிடம் உடம்பில் தெம்பு இல்லை. மிகவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவர் கட்சிக்கு மட்டும் அறிவுரை வழங்கினால் போதுமானது. அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் எம்.பி.யாக உள்ளார். அதுவே அவர்களின் குடும்பத்திற்கு போதுமானது. எனவே வருகின்ற தேர்தலில் துரைமுருகனுக்கு சீட் வழங்கக்கூடாது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தலைமை முடிவெடுக்க வேண்டும் பல முக்கிய நிர்வாகிகள் கடிதம் மூலமாக தங்களது முடிவை தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதம் எழுதியுள்ள பிரச்சனை வேலூர் தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வயதான காலத்திலும் பதவி ஆசைக்காக ஒரு சிலர் இன்னும் ஒட்டிக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News