Kathir News
Begin typing your search above and press return to search.

தனித்தமிழ்நாடு கேட்டால் பா.ஜ.க. வேடிக்கை பார்த்துட்டு இருக்காது - தி.மு.க'வுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை

தனித்தமிழ்நாடு கேட்டால் பா.ஜ.க. வேடிக்கை பார்த்துட்டு இருக்காது - தி.மு.கவுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை

ThangaveluBy : Thangavelu

  |  7 July 2022 10:51 AM GMT

தி.மு.க., எம்.பி., ராசா தனித்தமிழ்நாடு என்று பேசியிருப்பதை பார்த்து பா.ஜ.க. வேடிக்கை பார்த்துட்டு இருக்காது என்று பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறியிருப்பதாவது: அடுத்து வருகின்ற 2024 மற்றும் 26ல் நடைபெறும் எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலின்போது தென்மாநிலங்களில் பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உருவெடுக்கும். அதற்கான முன்னோட்டமாக கிராமங்களில் தாமரை பிரசாரம் முன்னெடுத்துள்ளோம்.

மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் லாக்கப் மரணங்களை எதிர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஒன்றரை வருட ஆட்சியில் 6 மரணங்கள் அரங்கேறியுள்ளது. இதனை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது. மேலும், தி.மு.க. எம்.பி., ராசா தனித்தமிழ்நாடு என்று சொல்வதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துட்டு இருக்காது. அதற்கான தக்க பதிலடியை கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News