Kathir News
Begin typing your search above and press return to search.

'தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி' - திருமாவளவனை தொடர்ந்து வேல்முருகனும் பிரிவினைவாத கருத்து !

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி - திருமாவளவனை தொடர்ந்து வேல்முருகனும் பிரிவினைவாத கருத்து !

Mohan RajBy : Mohan Raj

  |  25 Oct 2021 10:15 AM GMT

"தமிழ் நாட்டுக்கென தனிக் கொடி தேவை" என திருமாவளவனை தொடர்ந்து வேல்முருகனும் பிரிவினை உள்நோக்கோடு கருத்தை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1'ம் தேதியை கா்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றன. ஆனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970'களில் தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் கருணாநிதி. ஆனால், அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை.

எனவே தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்ற தமிழ்நாடு. இதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொள்கிறது" என கூறியுள்ளார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் இதே கருத்தை கூறியது குறிப்பிடதக்கது.



Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News