Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்த்து கூட கூற மனமில்லாத தலைவர்கள் மத்தியில் விநாயகரை வணங்கி வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பவ்யமாக வணங்கி நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாழ்த்து கூட கூற மனமில்லாத தலைவர்கள் மத்தியில் விநாயகரை வணங்கி வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை !

Mohan RajBy : Mohan Raj

  |  10 Sep 2021 6:45 AM GMT

இந்துக்களை மதித்து வாழ்த்து கூட சொல்லாத தலைவர்கள் மத்தியில் விநாயகரை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பவ்யமாக வணங்கி நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனோ செயல்பாடுகளை காரணம் காட்டி இந்துக்களை மட்டும் பண்டிகையை கொண்டாட விடாமல் தடை செய்தது தி.மு.க அரசு. இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தாலும் ஸ்டாலின் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆனாலும் தி.மு.க கட்சியை சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கல்லா கட்டுவதில் குறியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் விநாயகரை பக்தியுடன் வணங்கி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனுடன், "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா' என்றும், விநாயகரை நினைந்து செய்யும் அனைத்து செயல்களையும் சிறப்பாக முடித்துத் தருவார்! என்றும் பதிவிட்டு அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News