Kathir News
Begin typing your search above and press return to search.

100 சதவீதம் வாக்குப்பதிவு: வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கடலூர் மாவட்ட ஆட்சியர்.!

திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

100 சதவீதம் வாக்குப்பதிவு: வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கடலூர் மாவட்ட ஆட்சியர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 March 2021 10:12 AM IST

திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டிருந்தது.





அது மட்டுமின்றி முதல் வாக்களார்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இணைந்து கேக் வெட்டி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகர்கள் பலர் கலந்து கொண்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் கேன், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News