Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை.. எதிரிக்கு ஒற்றை கண் போக வேண்டும்.. அழகிரி ஆட்டம் ஆரம்பம்.!

எங்களுக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை.. எதிரிக்கு ஒற்றை கண் போக வேண்டும்.. அழகிரி ஆட்டம் ஆரம்பம்.!

எங்களுக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை.. எதிரிக்கு ஒற்றை கண் போக வேண்டும்.. அழகிரி ஆட்டம் ஆரம்பம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jan 2021 7:05 AM GMT

எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை எதிரிக்கு ஒற்றை கண்ணாவது போக வேண்டும் என்கிற மனநிலையில் மு.க.அழகிரி இருப்பதாக அவருக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களிடம் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். இதில் வந்திருந்த 90 சதவீதம் பேர் புதிய கட்சியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலித்த மு.க.அழகிரி விரைவில் புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

திமுகவில் எப்படியும் தன்னை சேர்த்துக்கொள்வார் என மு.க.அழகரி கடந்த சில வருடங்களாக காத்திருந்தார். தன்னுடைய உறவினர்களிடம் தூதுவிட்டு பார்த்துள்ளார் அழகிரி, ஆனால் அதனை உதாஷனப்படுத்தி வந்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில்தான் அழகிரி புதிய கட்சி தொடங்குவதற்கு மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார்.

தற்போது திமுகவில் ஸ்டாலினால் ஓரம் கட்டப்பட்டவர்களுடன் அழகிரி ஆதரவாளர்கள் தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர். முக்கிய நபராக இருந்தால் அழகிரியே நேரில் பேசி தங்களது அணிக்கு வர அழைப்பு விடுத்து வருகிறாம். பல மாவட்டங்களில் இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அழகிரி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அழகிரி ஒரு முடிவோடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எங்களுக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது ஸ்டாலினை முதலமைச்சராக வரவிடாக்கூடாது என்று கங்கனம் கட்டியுள்ளார் என்றே கூறப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சுமார் 100 தொகுதியில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி, 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வரை பிரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் திமுக வெற்றிப்பெறுகின்ற தொகுதிகளில் அழகிரி ஆதரவாளர்கள் வாக்குகளை பிரிப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் முதலமைச்சர் கனவு கனவாகவே இருக்கும் எனவும் அழகிரி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் காலங்களில் அழகிரியின் ஆட்டம் தெரியவரும் என அவரது ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News