Kathir News
Begin typing your search above and press return to search.

விடியா தி.மு.க. அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம் ! - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா!

விடியா தி.மு.க. அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம் ! - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா!

ThangaveluBy : Thangavelu

  |  6 Nov 2021 11:58 AM GMT

சென்னை அடுத்துள்ள மாமல்லபுரம் பெருமாள் கோவிலில் தமிழக அரசு சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. அப்போது அங்கு சாப்பிடச் சென்ற பழங்குடியின பெண்ணை அவமதிப்பதாகவும், அனைவருடன் சேர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை. இதனிடையே தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை மீது அஸ்வினி என்ற பெண் குற்றச்சாட்டை முன்வைத்தார். இவரது பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதனால் பதறிப்போன அறநிலையத்துறை அமைச்சர் பழங்குடி இன பெண் அஸ்வினி அருகே உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். அது மேலும் சர்ச்சையானது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பழங்குடி மக்கள் வசிக்கின்ற இடத்திற்கு சென்றார். அங்கு அஸ்வினி பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கினார். மேலும், இருளர் சமூகத்திற்காக முதலமைச்சர் பிரதமர் நலத்திட்டங்களை வழங்கினார். ஆனால் அதனை திமுகவினர் தமிழக அரசு வழங்கியது போன்று சமூக வலைதளங்களில் கருத்துக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.


இந்நிலையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடியின் கனவு திட்டமான முத்ரா திட்டத்தில் 12 நரிக்குறவர், இருளர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும், பிரதமர் மோடியின் சிறுதொழில் வங்கிக்கடன் திட்டத்தில் 33 நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பத்திற்கு தலா ரூ.10,000 என்று மொத்தமாக ரூ.15,30,000 ரூபாயை பிரதமரின் சார்பில் செங்கல்பட்டில் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நன்றி. ரூ.200 இணைய உ.பி-க்கள் இதற்கும் விடியா தி.மு.க அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்.

மேலும் செங்கல்பட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல, மத்திய அரசின் Department of Atomic Energy கீழ் இயங்கும் மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் (MAPS) நிறுவனத்தின் #CSR நிதியில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணையையும் முதல்வர் இன்று வழங்கினார். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News