நடிகர் விஜய் சந்திப்பில் நடந்தது என்ன.? முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.!
நடிகர் விஜய் சந்திப்பில் நடந்தது என்ன.? முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.!
By : Kathir Webdesk
தி.மு.க., தலைவர் பேசம்போது, குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறோம் என்று பேசியுள்ளாரே? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார், அவரே ஒத்து கொண்டாரல்லவா? கார்பரேட் கம்பெனி என்று ஒத்துக் கொண்டாரல்லவா? ஏனென்றால், நன்றாக சிந்தித்துப் பாருங்கள். முதலில் கருணாநிதி வந்தார். அவருக்குப் பின்னர் எவ்வளவு தலைவர்கள் வந்தார்கள்? அவர்களை விட்டு, விட்டு, ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினார்கள். அவரும் ஓரளவு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
ஆனால் ஸ்டாலின் மகன் உதயநிதி எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்? அவரின் வயது என்ன? இவருக்கு முன்பு துரை முருகன், நேரு, பெரியசாமி இருக்கிறார்கள்.
இப்படி பல தலைவர்கள், அந்த கட்சிக்காக உழைத்தவர்கள் திமுகவில் ஏராளம். அவர்களை முன்னிறுத்தலாமே? நிறுத்த வில்லையே? அதனால்தான் வாரிசு அரசியல் என்று நான் சொல்கிறேன் என்றார்.
உதயநிதிக்கு பின்னால் உதயநிதி மகன் வருவார். அது கட்சியல்ல, கார்பரேட் கம்பெனி, அதனால் படிப்படியாக அவர்கள் வாரிசுதான் வரும்.
அதிமுகவில் தலைமைக்கும், மக்களுக்கும் உழைக்கின்றவர்கள் நிச்சயமாக உயர்ந்த பதவிக்கு வர முடியும். என்மாதிரி என்றார்.
மேலும், நடிகர் விஜய் இரவு நேரத்தில் தங்களை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு, திரையரங்குகள் இன்னும் முழுமையமாக திறக்கப்படவில்லை. திரையரங்கங்கள் முழுமையாக திறப்பதற்கு அரசு நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.