Kathir News
Begin typing your search above and press return to search.

மன்னிச்சுடுங்கப்பா பேசினது தப்புதான் - நாஞ்சில் சம்பத்தை மேடையிலேயே மன்னிப்பு கேட்கவைத்த பொது மக்கள்

விவாத நிகழ்ச்சி மேடையில் பா.ஜ.க'வினரை தரக்குறைவாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக பொதுமக்கள் ஆவேசமாக நாற்காலிகளை தூக்கிக்கொண்டு பாய்ந்ததால் விறுவிறுப்பு ஏற்பட்டது.

மன்னிச்சுடுங்கப்பா பேசினது தப்புதான் - நாஞ்சில் சம்பத்தை  மேடையிலேயே மன்னிப்பு கேட்கவைத்த பொது மக்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2022 11:05 AM GMT

விவாத நிகழ்ச்சி மேடையில் பா.ஜ.க'வினரை தரக்குறைவாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக பொதுமக்கள் ஆவேசமாக நாற்காலிகளை தூக்கிக்கொண்டு பாய்ந்ததால் விறுவிறுப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதே மேடையில் தான் சொன்ன விமர்சனத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் நாஞ்சில் சம்பத். தனியார் தொலைக்காட்சி ஒன்றிய ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு பார்வையாளர்கள் கல்லூரி கலையரங்கத்தில் குவிந்திருந்தனர்.

அதில் பங்கேற்ற தி.மு.க'வின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது பாரதிய ஜனதா கட்சியினரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க'வினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கிக்கொண்டு நாஞ்சில் சம்பத்தை அடிக்க பாய்ந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களை சம்மதி படுத்திய நிலையில் என்னவென்று செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி போனார் நாஞ்சில் சம்பத். திடீரென மைக்கை பிடித்தவர் தான் சொன்ன கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் அமைதியாக கலந்து சென்றனர். பல கட்சிகளுக்கு தாவிய நாஞ்சில் சம்பத் ஒரு மேடையில் பேசி அதே மேடையிலே மன்னிப்பு கேட்க வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News