Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. புதுவை வீடுகளில் ஜொலிக்கும் தேசியக்கொடி..

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. புதுவை வீடுகளில் ஜொலிக்கும் தேசியக்கொடி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Aug 2023 8:55 AM GMT

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி புதுவை மாநிலத்திலும் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தேசியக் கொடிகள் வண்ணமயமாக ரம்யமாக ஜொலித்து வருகிறது.


புதுவை மாநிலத்தில் சுதந்திரதின விழா இன்று காலை 9 மணியளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடற்கரை சாலை வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு வருகை தர இருப்போர் அனைவரும் நல்லபடியில் நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மேடைகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.


பின்னர் திறந்த வெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து மேடைக்கு சென்று சிறப்பு உரை ஆற்றை இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதை அடுத்து புதுச்சேரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது பின்னர் காவல்துறையினர் என்சிசி மாணவர்கள் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News