Kathir News
Begin typing your search above and press return to search.

பத்துப்பாட்டை கேட்டு ரசித்த தமிழர் கூட்டம் குத்துப்பாட்டையும் ரசிக்கிறார்கள்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை..

பத்துப்பாட்டை கேட்டு ரசித்த தமிழர் கூட்டம் குத்துப்பாட்டையும் ரசிக்கிறார்கள்.. புதுச்சேரி கவர்னர் தமிழிசை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Aug 2023 5:46 AM GMT

நேற்று இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கலை-பண்பாட்டுத்துறையும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் புதுச்சேரி கலை விழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முரசு கொட்டி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.


விழாவைத் தொடங்கி வைத்து விட்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் கலை பற்றி கூறும் பொழுது, "பாரதியாரின் கவிதை, பாரதிதாசனின் நாடகங்கள், பல தேசிய உணர்ச்சிமிக்க பாடல்கள் எல்லாம் நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது. மனித வாழ்க்கையில் பிறப்பது முதல் இறப்பு வரை கலை தான் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக வாழ்க்கை என்பது பாட்டில் ஆரம்பித்து பாட்டில்தான் முடிகிறது. குழந்தைக்கு ஏன் தாலாட்டு பாடப்படுகிறது. நோய்களுக்கு இசை மருந்தாக இருக்கிறது.


அறுவை சிகிச்சை நடக்கும் பொழுதும் நடந்து முடிந்த பிறகும் நோயாளிகளுக்கு இசை ஒளிபரப்பப் படுகிறது. இவ்வாறு இசையின் மூலம் மனிதர்கள் மிகவும் சீக்கிரமாக குணமாவது கண்டறியப்பட்டு இருக்கிறது. பத்துப்பாட்டை கேட்டு ரசித்த தமிழர் கூட்டம் இன்று குத்து பாட்டையும் ரசிக்கிறது. கலை மறுவி மறுவி வந்தாலும் அடிப்படை கலாச்சாரம் மாற்றப்பட கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Input & image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News