Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மாநில அளவில் நல்லாசிரியர் விருது.. ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..

புதுச்சேரி: மாநில அளவில் நல்லாசிரியர் விருது.. ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Sep 2023 1:16 AM GMT

ஆசிரியர்கள் தினம் வருகிற 5-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இதற்காக புதுச்சேரி அரசாங்கம் சார்பில் மாநில அளவில் நல்லாசிரியருக்கான விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் நல்ல ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பட்டியலும் தற்பொழுது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருதுகளை பெற இருக்கிறார்கள் இதன் காரணமாக அவர்களை முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு இருக்கிறார். இதையொட்டி தொடக்கப்பள்ளி அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை நாவர்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெருமாள், காரைக்கால் கண்ணாப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பெறுகின்றனர்.


பட்டதாரி ஆசிரியர்களில் பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்வடிவு, இந்திராநகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் கந்தசாமி ஆகியோர் பெறுகின்றனர். முதல்-அமைச்சரின் சிறப்பு விருதுகளை கொடாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மோகன்ராஜ், கீழ அக்ரகாரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருள்மொழி, சாரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இந்துமதி, பாக்குமுடையான்பட்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்கோஸ் தெரேஸ் சுதா ஆகியோர் பெறுகின்றனர்.


தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருதை கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பச்சையப்பனும், கலவைக்கல்லூரி அரசுப்பள்ளி பிரெஞ்சு ஆசிரியர் ராஜன் ஜார்ஜ் ஆகியோர் பெறுகின்றனர். விருது பெற இருக்கும் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை முதலமைச்சர் பதிவு செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News