Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் நேரத்தில் மதுபானம் கடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் - கலால்துறை எச்சரிக்கை!

தேர்தல் நேரத்தில் மதுபானம் கடுத்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் - கலால்துறை எச்சரிக்கை!

G PradeepBy : G Pradeep

  |  3 March 2021 11:32 AM GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி இருமாநில எல்லைகளில் மதுபானம் கடத்துவதை கண்காணித்து, தடுப்பது தொடர்பாக தமிழக மது கடத்தல் தடுப்பு சிறப்பு டிஜிபி கருண் சின்ஹா, கலால்துறை ஆணையர் கிர்லோஷ் குமார் மற்றும் புதுச்சேரி காவல்துறை ஏடிஜிபி ஆனந்த் மோகன், கலால் துறை ஆணையர் அபிஜித் சிங், துணை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கலால்துறை அதிகாரிகள் கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில கலால் துறை துணை ஆணையர் சுதாகர், தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தனி நபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மதுபானம் கடத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News