Kathir News
Begin typing your search above and press return to search.

அதிரடி காட்டும் ஆளுநர் தமிழிசை! புதுச்சேரி பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய அறிவிப்பு!

அதிரடி காட்டும் ஆளுநர் தமிழிசை! புதுச்சேரி பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகத்தில் ஆழ்த்திய அறிவிப்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  12 March 2021 1:01 AM GMT

புதுச்சேரியில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, ஆலோசனைகளுக்கு பின் கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த சூழலில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், 2020 - 2021ம் கல்வியாண்டில், புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளார்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் "ஆல் பாஸ்" என்று அறிவிக்கப்படுகிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். மகே மற்றும் யானம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள்.

பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 "முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1 ஏப்ரல் 2021 முதல் தொடங்கும். இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 மற்றும் 12 வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News