Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி பா.ஜ.கவுக்கு எந்த தகவலும் பகிரப்படவில்லை - ஆதார் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிப்பு!

புதுச்சேரி பா.ஜ.கவுக்கு எந்த தகவலும் பகிரப்படவில்லை - ஆதார் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அறிவிப்பு!

JananiBy : Janani

  |  3 April 2021 1:31 AM GMT

புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் ஆதார் விவரங்களைக் குறிப்பாக போன் நம்பர்கள் எதுவும் பா.ஜ.கவுக்கு வழங்கப்படவில்லை என்று இந்திய ஆதார் ஆணையம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது.


புதன்கிழமை அன்று DYFI யின் தலைவர் ஆனந்த்திடம் இருந்து பொது நல வழக்கு ஒன்று வந்தபோது, நீதிபதி சஞ்சீப் பானெர்ஜீ மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்று ஆதார் ஆணையத்தின் ஆலோசகர் கூறினார்.


நாட்டில் வறுமை போன்ற பிரச்சனைகள் உள்ளபோதிலும், நாடு ஒரு வெற்றிகரமான ஜனநாயகம் என்பதை உலகத்துக்கு எடுத்துரைக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்து மேலும் தேர்தல் சமயங்களில் முறைகேடுகள் நிகழும் போதெல்லாம் அது வெளிப்படும் என்று தெரிவித்தது.

புதுச்சேரி பா.ஜ.க பிரிவைத் தலைமை தாங்கும் நீதிபதி, தொலைப்பேசி விவரங்களைக் கட்சி திருடவில்லை என்று நீதிபதிக்குக் கூறினார். இது நீண்ட காலத்துக்கு முன்பு கட்சி நபர்களால் சேகரிக்கப்பட்டது. மேலும் இது கொரோனா தொற்றுநோய் காலம் என்பதால் புதுமையான முறைகளைப் பயன்படுத்தியது என்று தெரிவித்தது.




இதுபோன்ற புதுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் சுதந்திரமாக நியாமாக நடக்க வேண்டும் என்றால் ஒரு நிலையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை ஒரு நாளைக்கு ஒத்திவைத்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News