Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: குடும்பத் தலைவிகளுக்கு ரூ1, 000 உதவி தொகை பெற அடையாள அட்டை!

புதுச்சேரி: குடும்பத் தலைவிகளுக்கு ரூ1, 000 உதவி தொகை பெற அடையாள அட்டை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Sep 2023 4:49 AM GMT

புதுச்சேரியில் குடும்பத் தலைவர் களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குடும்ப தலைவிகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழக்கப்படுகிறது. இந்த திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.


புதுச்சேரியிலும் அனைத்து மகளிருக்கு இந்த ஒரு நலத்திட்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பெயரில் தான் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மும்மரமாக இங்கு ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உதவித் தொகையை வழங்கி திட்டத்தை விரிவுப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பயனாளி களுக்கு ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் அந்த தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News