Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கத் திட்டம்!

புதுச்சேரியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கத் திட்டம்!

JananiBy : Janani

  |  2 March 2021 9:46 AM GMT

புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய ஊக்குவிப்பதற்காகக் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஊக்குவிக்கப் புதுச்சேரி சிந்தனையாளர் மன்றம் திட்டமிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6 இல் நடைபெறவுள்ளது.




ஞாயிற்றுக்கிழமை அன்று மன்றத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில், வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஓவியம், இசை மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் நடத்தத் தேர்தல் ஆணையைத்தியம் அனுமதி பெற அணுகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுதவிர அந்த மன்றம் பொதுமக்களுக்காக ப்ரோமென்டே கடற்கடையை முழுமையாகத் திறக்கவும் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களான கால்வ் கல்லூரி மற்றும் பழைய கலங்கரை விளக்கு உள்ளிட்டவற்றைப் புதுப்பிக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.




விழுப்புரம்-புதுச்சேரி-காரைக்கால்-நாகப்பட்டினம் உள்ளிட்டவற்றை இணைக்கும் நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கவந்த அதே வேளையில், மன்றம் கிழக்கு கடற்கரைச் சாலையின் ரயில்வே இணைப்பையும் திறந்து வைக்க மன்றம் முயற்சி செய்ததாக K செல்வம் மற்றும் சண்முகாகார்திக் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மகாகவி பாரதியாரின் இறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 'பாரதீஸ் தமிழ்' என்ற கவிதை போட்டியும், கவிஞர்கள் பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன் தலைமையில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 25 கவிஞர்கள் அதில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கவிதை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News