Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ்: கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த கோரிக்கை!

புதுச்சேரியில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கும் 11 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் 11 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ்: கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த கோரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  3 Jan 2022 1:30 PM GMT

புதுச்சேரியில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கும் 11 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதில், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் அடங்கும். இதனால் தமிழகத்திலும் 30க்கும் மேற்பட்டோர்கள் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்க பெங்கரூரு நிமான்ஸ் மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி 11 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 11 பேருக்கு வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy: DT Next

Next Story
கதிர் தொகுப்பு
Trending News