Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்விக் கொள்கை 2020.. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய பாதை அமைக்கும் திட்டம்..

தேசிய கல்விக் கொள்கை 2020.. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய பாதை அமைக்கும் திட்டம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 July 2023 3:24 AM GMT

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புது தில்லியில் NEP 2020 3வது ஆண்டு கொண்டாட்டத்தில் இணைவதற்கான அடையாள நடவடிக்கையாக புதுச்சேரியில் கேந்திரிய வித்யாலயாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட்டப்பட்டது. இதில் கேந்திரிய வித்யாலயா, ஜிப்மர் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா முதல்வர், ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் மற்றும் சிபிஎஸ்சி முதல்வர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தாங்கிய பள்ளி முதல்வர் ஸ்ரீ ஜோஸ் மேத்யூ NEP 2020ஐ, திறம்பட செயல்படுத்துவதன் மூலம் கல்வியின் அடிமட்ட நிலையை மறு வரையறை செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டினார்.


NEP 2020 ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய பார்வையை திறப்பதாக பாராட்டினார். கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டதிலிருந்து செயல்படுத்திய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்து அவர் விவாதித்தார். பாலவாதிகா 1,2,3 வகுப்புகள் முதல் கட்ட அமலாக்கத்தில் தொடங்குவதற்காக இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பள்ளிகளில் நம்பர் ஒன் ஜிப்மர் ஒன்றாக இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாலவாதிகாவில் வழங்கப்பட்ட அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண் கணிதத்திற்கு பிறகு மாணவர்களின் மன வயதிற்கு ஏற்றவாறு ஒன்றாம் வகுப்பு செயற்கைக்கான வயதை மறு சீரமைப்பது குறித்து அவர் பேசினார்.


NEP 2020, சமூக பொருளாதார பின்தங்கிய குழு, கல்வியின் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் படுவதற்கான சூழலை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். தாய்மொழி அல்லது பல மொழிகளின் பயன்பாட்டிற்கு NCF முக்கியத்துவம் கொடுப்பது, அடிப்படை கல்வி அறிவை தூண்டுவதற்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் மாணவர்களின் திறன்கள் மற்றும் கலாச்சார விழிப்புணர்வு, அவர்களை வழிநடத்துகிறது என்றார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News