Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு...

புதுவை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 July 2023 5:29 AM GMT

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்று 4 பிராந்தியங்களிலும் அரசு நிதியுதவி பெறும் 35 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இத்தகைய பள்ளிகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் சம்பளம் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர்களும் அரசின் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களாகவே கருதப்படுகிறார்கள்.


அதாவது சம்பள பணத்தில் 95 சதவீதத்தை அரசு வழங்கி விடுகிறது. மீதமுள்ள 5 சதவீதத்தை நிர்வாகம் வழங்குகிறது. இவர்களுக்கான சம்பள தொகையை அரசு அவ்வப்போது விடுவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான சம்பளத்திற்கு 24 கோடியே புதுவை கல்வித்துறை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருக்கிறது.


இதன் மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட உள்ளன. இந்த நிதியில் 2023-24-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் தொழில்வரியை பிடித்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்துமாறும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை செயலாளர் சார்பில் நேற்று வழியாக இருக்கிறது என்பதும் தற்போது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News