Begin typing your search above and press return to search.
புதுச்சேரியில் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள் முழுநேரம் இயங்கும் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

By :
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவிய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 24 -ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்பட்டது.
நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் காலை எட்டு முப்பது மணி முதல் ஒரு மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வரும் 3-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் முழுநேரம் இயக்கப்படும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story