Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: பா.ஜ.க கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - மாநில தலைவர் சாமிநாதன் உறுதி!

புதுச்சேரி: பா.ஜ.க கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - மாநில தலைவர் சாமிநாதன் உறுதி!

G PradeepBy : G Pradeep

  |  5 March 2021 8:32 AM GMT

புதுச்சேரியில் கூட்டணி குறித்து என். ஆர் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்பி, மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் விவகாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் இடங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அறிவிப்புகள், தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பின்பு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது வரை கூட்டணி தொடர்வதா தெரிவித்தனர்.

மேலும் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறி அவர்கள், கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது குறித்து முடிவு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் தெரிவித்தனர். மேலும் பா..ஜக கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News