Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ரூ. 31 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்..

புதுச்சேரி: ரூ. 31 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jun 2023 5:23 AM GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் தற்போது 31 கோடி செலவில் புதுச்சேரி பேருந்து நிலையத்தை திறன்மிகு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பூமி பூஜையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். மேலும் இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. குறிப்பாக புதுச்சேரி பேருந்து புதிய மருத்துவ நிலையத்திலிருந்து கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பெருநகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


நகர பகுதிகளிலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் நாள்தோறும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போது இருக்கும் இந்த ஒரு பேருந்து நிலையம் சுமார் 31 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறன்மிகு ஒருங்கிணைந்த நவீன பேருந்து முனையம் ஆக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வைத்து இருக்கிறார்.


இதற்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து பேருந்து நிலைய கட்டுமான பணியை சிறப்பாக தொடங்கி வைத்தார். விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பமாக இருக்கிறது. மிக சீக்கிரமாக இந்த பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News