Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மத்திய அரசு ₹38,000 கோடி ஒதுக்கீடு...

கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மத்திய அரசு ₹38,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுச்சேரி: கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மத்திய அரசு ₹38,000 கோடி ஒதுக்கீடு...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 July 2023 6:01 AM GMT

கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மத்திய அரசு ₹38,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது இந்தத் தொகையானது, நலன்புரி நடவடிக்கைகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள் அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. புதுச்சேரியில் வியாழக்கிழமை மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சபாநாயகர் ஆர்.செல்வம் ஆகியோர் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.


புதுச்சேரியில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சபாநாயகர் ஆர்.செல்வம் ஆகியோர் விழாவில் கிசான் அட்டைகளை மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, மீன்வளத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.


புதுச்சேரியில் மீனவர்களுக்கு கிசான் அட்டைகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், பிரதமராக மோடி பதவியேற்கும் வரை பட்ஜெட்டில் சுமார் ₹3,500 கோடி ஒதுக்கப்பட்டது. இது 2015ல் சுமார் ₹5,000 கோடியாக அதிகரித்தது. அதன்பின், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஆண்டு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News