புதுச்சேரி: பா.ஜ.க மற்றும் AINRC கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக N ரங்கசாமி!
By : Janani
புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதனை அடுத்து தற்போது புதுச்சேரியில் அனைத்து இந்திய NR காங்கிரஸ் பா.ஜ.க வுடன் ஒரு ஒப்பந்தத்தை நடத்தியுள்ளது. மேலும் N ரங்க ஸ்வாமி முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளது.
மேலும் 17 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும் மற்றும் 13 தொகுதிகளை பா.ஜ.க மற்றும் AIADMK ஆகிவற்றிகும் பகிர்ந்து கொள்ளலாம் என்று AINRAC கட்சியின் ரங்கசாமி நெருங்கிய வட்டாரங்களுக்குத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
AINRC மற்றும் பா.ஜ.க இடையிலான ரங்க ஸ்வாமி முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் மற்றும் 17 தொகுதிகளைக் கோருவது குறித்தும் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் திங்களன்று ஒரு நேர்மறையான பேச்சுவார்த்தை தொடங்கியது, நான்கு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருகட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் முன்மொழிந்தனர்.
ரங்க ஸ்வாமி முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க பா.ஜ.க சிந்தித்த போது தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திங்களன்று மற்றொரு கூட்டணியான, திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிந்தது.