Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஆக்ஸிஜன் படுக்கைகளை காணொளி மூலமாக திறந்து வைத்த Dr.தமிழிசை!

புதுச்சேரி: ஆக்ஸிஜன் படுக்கைகளை காணொளி மூலமாக திறந்து வைத்த Dr.தமிழிசை!

ParthasarathyBy : Parthasarathy

  |  14 Jun 2021 10:25 AM GMT

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொரோனா பரவலை கட்டுப்பாடுத்த பல திட்டங்களையும், மருத்துவ முயற்சிகளை செய்து வருகிறார். குறிப்பாக பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு காணொளிகளை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆக்ஸிஜன் படுக்கைகள் வழங்கும் திட்டத்தை காணொளி மூலமாக துவக்கி வைத்தார்.



இது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் "புதுச்சேரி மாநிலத்தில் "உயிர் காற்று" திட்டத்தின்கீழ் புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆக்ஸிஜன் படுக்கைகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா நிவாரண மருத்துவ பொருள்களை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News