புதுச்சேரி: முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் தொங்கிப்பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கவுள்ள NDA கூட்டணி.!
By : Janani
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் தொகுதி பங்கிடு குறித்து இறுதிமுடிவைச் செய்வதற்கு ஓரிரு நாட்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) கூட்டத்தை நடத்தவுள்ளதாக பா.ஜ.க தலைவர் V சாமிநாதன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பா.ஜ.க தலைமைச் செயலகத்திலிருந்து உரையாற்றிய சாமிநாதன், "புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்த மத்திய அமைச்சர் Mcகௌமன் தலைமையில் செயற்குழு அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் மற்றும் தேர்தல் குறித்த முதற்கட்ட அறிக்கையைத் தயார்செய்ய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
மேலும் இவரது தலைமையின் கீழ் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் குறித்த அறிக்கை மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்பது குறித்து தயார் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NR காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பா.ஜ.க தலைவர் NR காங்கிரஸ் NDA வின் ஒருபகுதி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் கூட்டம் அமைத்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
முன்னர் மத்திய அமைச்சர்கள் கௌமன் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. யூனியன் பிரதேசத்தில் முதலமைச்சர் நாராயண ஸ்வாமி தலைமையிலான அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பு சரிந்தது.
ஐந்து காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் ஒரு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 22 இல் 33 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் முதலமைச்சர் நாராயண ஸ்வாமி ராஜினாமா செய்தார். பிப்ரவரி 23 இல் அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார்.
மேலும் கிரண் பேடி மாநில L-G ஆக மாற்றப்பட்டார், மேலும் தெலுங்கனா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் யூனியன் பிரதேசத்தில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.