Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 10 பேர் அதிரடி கைது!

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 10 பேர் அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  28 May 2022 1:30 PM GMT

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி, திருக்கானூர் அருகே உள்ள காட்டேரிகுப்பம் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து திருக்கவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த சதீஷ் 18, அஜய் (18), ஆகாஷ் (24) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக மணக்குள விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்த குரு 20, வேலூ 25, உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News