Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 9:45 AM GMT

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வகையான மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரோடியர்மில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதன்பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், 3 முட்டைகளாக உயர்த்தி வழங்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் பல ஆயிரம் ஏழை குழந்தைகள் ஊட்டச்சத்து பெறுவார்கள் என கூறப்படுகிறது. ஆளுநர் உத்தரவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News