Kathir News
Begin typing your search above and press return to search.

மலேசிய பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச பதிவு: ஆளுநர் தமிழிசையிடம் பரபரப்பு புகார்!

மலேசிய பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச பதிவு: ஆளுநர் தமிழிசையிடம் பரபரப்பு புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  15 Feb 2022 8:45 AM GMT

மலேசிய பெண் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ஆபாச பதிவுகளை அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டில் உள்ள பகாங் மாநிலத்தில் உள்ள சபாய் என்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ ஆவார். இவர் ஒரு தமிழர் ஆவார். இதனிடையே புதுச்சேரியை சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் பெண் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்ந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார்.

அது மட்டுமின்றி பேஸ்புக் மூலமாக மெசஞ்சரில் போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆபாச பதிவுகளை வெளியிட்ட நபரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவரிடம் மிகவும் ஆபாசமான முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழச்சி காமாட்சி துரைராஜூ எம்.எல்.ஏ., அந்த நபர் குறித்த உரிய ஆவணங்களுடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆடியோ வாயிலாக புகார் மனு அளித்துள்ளார். அந்த ஆடியோவில், தனக்கு தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை அனுப்பி வருகிறார். நான் விசாரித்ததில் அந்த நபர் புதுச்சேரியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அரசியல் கட்சியை சார்ந்தவர் என தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மலேசிய பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய நபர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Daily Thanthi

Image Courtesy: The Wire

Next Story
கதிர் தொகுப்பு
Trending News