Kathir News
Begin typing your search above and press return to search.

காரைக்காலில் அறுவடை செய்யும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யுமா?

காரைக்காலில் அறுவடை செய்யும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை.

காரைக்காலில் அறுவடை செய்யும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Nov 2022 2:51 AM GMT

காரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களிடம் காரைக்காலில் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார்கள்.nகாரைக்காலில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அதற்கு உரிய விலை கொடுத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை அவர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.


தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆக பன்னீர்செல்வம் காரைக்காலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அங்கு கூடிய விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பையை பரிசாக வழங்கினார். அண்மையில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு நிவாரணத்தை அறிவிப்பாரு என்று கூறப்பட்டு இருக்கிறது.


இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் விவசாயிகள் நிவாரணைக்கு கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்நிலையில் தொடர்ந்து காரைக்கால் விவசாய நல சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அமைச்சரிடம் நேரில் சந்தித்து மனு ஒன்றை அழுத்தி இருக்கிறார்கள். அதாவது காரைக்காலில் வரும் சம்பா அறுவடையின் போது காரைக்கால் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நிலை தமிழக அரசின் நுகர்வோர் வணிக கழகத்தின் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News