Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு திட்டங்கள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள 15 குழுக்கள் அமைப்பு!

மத்திய அரசு திட்டங்கள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள 15 குழுக்கள் அமைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  10 April 2022 7:25 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் 15 குழுக்கள் அமைத்து மத்திய அரசு திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். இதில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஜல்சக்தி திட்டம், மக்கள் மருந்தகம் உட்பட பல திட்டங்களில் பயன் அடைந்தவர்கள் மத்திய அரசுக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று சமயத்தில் வழங்கியதை போன்று மேலும் 6 மாதங்கள் 5 கிலோ அரிசி இலவசமாக பிரதமர் மோடி வழங்கி வருகிறார். தற்போதைய ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy:India.Com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News