Kathir News
Begin typing your search above and press return to search.

வாகனம் பறிமுதல் செய்ததால் தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி வள்ளலார் சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனம் பறிமுதல் செய்ததால் தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Dec 2021 4:00 AM GMT

புதுச்சேரி வள்ளலார் சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பொம்மையாளர் பாளையத்தை சேர்ந்தவர் கார்வண்ணன் 35, இவர் புதுச்சேரி வள்ளலார் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனிடையே அவர் கடந்த 10 மாதமாக கடன் தவணை தொகை செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவருடைய வாகனத்தை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இது பற்றிய அறிந்த கார்வண்ணன் நிதி நிறுவன மேலாளர் சக்திவேலு 37, என்பவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சக்திவேலுவை கொலை செய்துவிடுவேன் என்று கூறியதுடன் மட்டுமின்றி தனியார் நிறுவனத்தை வெடிகுண்டு வீசி தரைமட்டமாக்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன தனியார் நிதி நிறுவன மேலாளர் சக்திவேல் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கார்வண்ணனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: eWeek


Next Story
கதிர் தொகுப்பு
Trending News