Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவையில் நேற்று 97 பேருக்கு தொற்று உறுதியானது !

Breaking News.

புதுவையில் நேற்று 97 பேருக்கு தொற்று உறுதியானது !

G PradeepBy : G Pradeep

  |  21 Aug 2021 5:46 AM GMT

புதுவையில் நேற்று 5024 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 97 பேருக்கு தொற்று உறுதியானது. புதுவையில் 59 பேரும், காரைக்காலில் 17 பேரும் ஏனாமில் 4 பேரும், மாகியில் 17 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் ஜிப்மர் மருத்துவமனை, 22 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனை, 18 பேர் கோவிட் கேர் சென்டர் என மொத்தம் 179 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 784 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலம் முழுவதும் 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் இதுவரை 1,22,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 105 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை 1,20,004 பேர் குணமடைந்துள்னர். இன்று புதுவையின் 4 பிராந்தியங்களிலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கை 1806 ஆக உள்ளது.

இந்த தகவல்களை சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

Image : unsplash

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News