Kathir News
Begin typing your search above and press return to search.

கையுறை அணியாமல் தூர்வாரிய துப்புரவு தொழிலாளர்!

புதுச்சேரியை அடுத்த மூலக்குளம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு துப்புரவு பணியாளர்கள் ஆண் மற்றும் பெண் என 2 பேர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் கையுறை, பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றி வந்தனர்.

கையுறை அணியாமல் தூர்வாரிய துப்புரவு தொழிலாளர்!

ThangaveluBy : Thangavelu

  |  14 Dec 2021 11:43 AM GMT

புதுச்சேரியை அடுத்த மூலக்குளம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு துப்புரவு பணியாளர்கள் ஆண் மற்றும் பெண் என 2 பேர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் கையுறை, பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றி வந்தனர்.

அந்த கால்வாயில் மனி கழிவுகளும், சாக்கடைகளும் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் துப்புரவு பணியை திறம்பட செய்தனர்.

இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதால் துப்புரவு தொழிலாளர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News