Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவையில் சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது!

புதுவையில் சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது!

ThangaveluBy : Thangavelu

  |  16 March 2022 11:14 AM GMT

புதுச்சேரியில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று இந்தியாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதற்கேற்றார் போல் தடுப்பூசி போடும் பணி முழுமை அடையும் தருவாயில் உள்ளது.

மேலும், 12 முதல் 14 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதே போன்று புதுச்சேரியில் இன்று காலை தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் இந்திராகாந்தி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். தற்போது 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy:Nikkei Asia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News