Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பட்டியிலன அமைப்பு!

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பட்டியிலன அமைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  11 March 2022 12:26 PM GMT

புதுச்சேரியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு கூறு துணைத் திட்டத்தில் உள்ள நிதியை முழுமையாக செலவிட வலியுறுத்தியும், அது போன்ற செயல்படுத்தாத அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி பட்டியிலன மற்றும் பழங்குடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி சட்டசபையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

இதனை அறிந்த போலீசார் அந்த அமைப்புகளை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஏற முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கும், அந்த அமைப்புக்கம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதன் பின்னர் போராட்டக்காரர்களை முதலமைச்சரிடம் சந்தித்து மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். அதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News