Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரம் நீடிக்காது: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு!

எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரம் நீடிக்காது: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  13 May 2022 11:09 AM GMT

புதுச்சேரி மாநில பா.ஜ.க. மாவட்ட பட்டியல் அணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சியில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. பட்டியலின தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார்.

இதில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பட்டியல் பணி பொறுப்பாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று, பட்டியல் அணி நிர்வாகிகளுக்கு பொறுப்புக்கான நியமனம் கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: பா.ஜ.க. மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பா.ஜ.க. மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். தினமும் கட்சியின் வளர்ச்சி என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் பா.ஜ.க. மக்கள் விரோதமான கட்சி என்று எதிர்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில், தற்போது உண்மையை மக்கள் உணர தொடங்கிவிட்டனர். அதிலும் சிறுபான்மை சமூக மக்கள் மற்றும் பட்டியலின மக்கள் பா.ஜ.க. மட்டுமே விடியலை கொடுக்க முவடியும் என நம்பிக்கை வைத்தார். மேலும், பா.ஜ.க.வால் சலுகைகள் பறிபோய்விடும் என எண்ணுகின்றனர். இது எல்லாம் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே மக்களிடம் பொய்யான தகவலை கொடுக்கிறது. பட்டியல் இன மக்களையும், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் உயத்திப் பிடிக்கின்ற கட்சி பா.ஜ.க. மட்டுமெ. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source, Image Courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News