Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி கோயில் திருவிழாவில் வெடிவிபத்து: 4 பேர் காயம்!

புதுச்சேரி கோயில் திருவிழாவில் வெடிவிபத்து: 4 பேர் காயம்!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2022 2:40 AM GMT

புதுச்சேரி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி எல்லையருகில் அமைந்திருப்பது சின்ன இருசாம்பாளையம் என்ற கிராமம். அங்கு அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதே போன்று திருவிழாவில் வான வேடிக்கை மற்றும் தீப்பந்தங்களை கொண்டு விளையாடிய போது எதிர்பாராத விதமாக தீப்பொறி பட்டாசு வைத்திருந்த இடத்தில் விழுந்தது. இதனால் மூட்டையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இதனால் திருவிழாவிற்கு வந்தவர்கள் மேல் விழுந்ததால் அலறியடித்து ஓடத்துவங்கினர். இதில் லெட்சுமி நாராயணன், மாதவன், அர்ஜூனன் உள்ளிட்ட 3 சிறுவர்களும் சரத் என்ற இளைஞரும் தீக்காயத்தில் சிக்கினர். இவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News