Kathir News
Begin typing your search above and press return to search.

'எல்லாம் செழிக்க இறைவன் அருள் புரியட்டும்' - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரம்ஜான் வாழ்த்து!

எல்லாம் செழிக்க இறைவன் அருள் புரியட்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரம்ஜான் வாழ்த்து!

ThangaveluBy : Thangavelu

  |  3 May 2022 4:02 AM GMT

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: புனித ரம்ஜான் மாதத்தில் பிறை கண்டு ஈகைப்பெருநாள் கொண்டாடும் புதுச்சேரியில் இருக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நன்னாளில், இரக்கம், சகோதரத்துவம், ஈகை குணம், அருட்கொடை, அன்பு, அமைதி எல்லாம் செழிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News